குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Wednesday, September 25, 2013

தாயின் கல்லக்காதலனால் துஷ்பிரயோகப் படுத்திக் கொல்லப்ட்ட ஒரு வயதுக் குழந்தை

பச்சிளம் மொட்டுகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதும் அவ்வாறு துஷ்பிரயோகப் படுத்திய உலகம் அறியாத பிஞ்சுக்குழந்தைகளைக் கொன்று வயலிலும் ஆற்றிலும் வீசிவிட்டுச் செல்வது தொடர்பான செய்திகளுக்கு இன்றைய ஊடகங்களில் பஞ்சமே இல்லை. இவ்வாறான சம்பவங்கள் ஒரு நாளைக்கு ஒன்றேனும் வரும் என்ற நிலை மாறி பக்கத்துக்கு ஒரு செய்தி என்று வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இவ்வாறு காமுகர்களின் பசிக்கு இரையாகும் அதிகமான உயிர்கள் தனக்கு என்ன நடந்தது என்பதையே அறிந்துகொள்ள முடியாத பருவத்தில் உள்ளமையே பரிதாபகரமான விடயம்.
இவ்வாறானதொரு  சம்பவம் கடந்த 16 ஆம் திகதி வெலிமட பொரகஸ் என்ற பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.   அனுஷா சந்துனி என்ற ஒரு வருடமும் இரண்டு மாதங்களுமேயான குழந்தை  தனது தாயின் கள்ளக் காதலனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளது.

ஜெயசித்ராவின் முதலாவது மகளுக்கு  5 வயது. இரண்டாவது மகள் அனுஷா. தனது திருமண வாழ்க்கை முறிந்து போனதால் இரு பிள்ளைகளையும் தனது தாயிடம் ஒப்படைத்து விட்டு வரக்காபொல பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு, வீட்டு வேலைக்காரியாகச் சென்றாள் ஜெயசித்ரா.

அங்கு வீட்டு வேலை செய்து கொண்டிருக்கும் போது அதே வீட்டில் வேலை பார்த்த சூரசேன என்பவருடன் ஜெயசித்ராவுக்கு தொடர்பு ஏற்பட்டது.  சிறிது காலத்தில் இவர்களது இந்த முறையற்ற தொடர்பை வீட்டுக்காரர்கள் அறிந்து கொள்ள ஜெயச்சித்ரா, சூரசேன இருவரும் வேலையை விட்டு அனுப்பப்பட்டார்கள்.

இவ்வாறு வேலை பறிபோன ஜெயசித்ரா தனது  தாயின் பாதுகாப்பில் இருந்து இரண்டாவது மகள் அனுஷாவையும் அழைத்துக் கொண்டு சூரசேனவின் ஊரான  உடபுசல்லாவ ரக்வானைக்குச் சென்றாள்.  அங்கு அவர்களது குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்கு வருமானமோ வழியோ ஒழுங்காக அமையாததால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெலிமட பொரகஸ் பிரதேசத்துக்குச் சென்றார்கள்.  அங்கு அன்றாட கூலி வேலைகளைச் செய்து தமது வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தார்கள்.

தனக்கு ஒரு விடிவுகாலம் ஆரம்பித்து விட்டது என்று எண்ணி புதிதாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த ஜெயசித்ரா, துரதிர்ஷ்ட வசமாக கடந்த 16 ஆம் திகதி நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். சூரசேன ஜெயசித்ராவை வெலிமடை வைத்தியசாலையில் அனுமதித்து அவளுக்குத் தேவையானவற்றைச் செய்து விட்டு அனுஷாவைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்றான்.

அவ்வாறு வீட்டுக்குச் சென்ற சூரசேன மீண்டும் 17 ஆம் திகதி அதிகாலை அனுஷாவைத் தூக்கிக்கொண்டு வைத்தியசாலைக்கு ஒடி வந்தான். மகளுக்கும் திடீரேன்று என்னமோ நடந்து விட்டது என்று வைத்தியசாலையில் அனுமதிக்கிறான். வைத்தியசாலையில் அனுஷாவைப் பரிசோதித்த வைத்தியர்கள் அனுஷாவின் உயிர் பிரிந்து நீண்ட நேரமாகிவிட்டதை உறுதிப்படுத்துகிறார்கள். அத்தோடு சூரசேனவும் காணாமல் போய்விட்டான்.

சூரசேன காணாமல் போனதும் குழந்தையின் இறப்பும் சந்தேகத்துக்கிடமாக இருந்ததால் வெலிமட நீதவானின் உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனைக்காக அனுஷாவின் உடல்  பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.

பிரேத பரிசோதனை முடிவுகளின் படி குழந்தையின் தலையில் பலமாக அடித்ததனாலும் மூளைக்கு அதிக இரத்தம் சென்றதனாலும் குழந்தையை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததனாலுமே இந்த மரணம் நேர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.  அது மாத்திரமன்றி உடம்பில் சிகரெட்டால் சுட்ட வடுக்கள் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சில நாட்களின் பின் கைதான சூரசேன பொலிஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் “கடந்த 16 ஆம் திகதி ஜெயசித்ராவை வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு வீட்டுக்குச் சென்ற பின்னர் வீட்டில் குழந்தையை நள்ளிரவு வரை பாலியல் ரீதியாக பல துன்புறுத்தல்களைச் செய்தேன். அப்போது குழந்தை பலமாகக் கத்த ஆரம்பித்தது. பக்கத்தில் உள்ளவர்களுக்கு கேட்டுவிடும் என்பதனால் கையைப் பொத்தி குழந்தையின் தலையில்  மூன்று முறை தட்டினேன். அப்போது குழந்தை அமைதியடைந்து தூங்கிவிட்டது. இரவு இரண்டு மணியளவில் குழந்தையின் உடல் குளிர்ந்து காணப்பட்டது. அப்போது தான் வெலிமட வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றேன். அங்கு குழந்தையை ஒப்படைத்துவிட்டு நான் உடபுசல்லாவைக்குச் சென்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளான்.

தந்தையே சொந்த மகளை வல்லுறவுக்குட்படுத்தும் இந்தக் காலத்தில் பெண் பிள்ளைகளை வைத்துள்ள தாய்மார் மிகவும் கவனமாக இருந்து கொள்ள வேண்டும். கன்னிப் பெண், பிஞ்சுக் குழந்தை என்ற வித்தியாசம் இல்லாமல் தமது வெறியைத் தீர்த்துக் கொள்ளும் அரக்கர்களிடம்  இருந்து தமது பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையாகும். ஒரு விபரீதம் நடந்த பின்னர்  அழுது புலம்புவதில் பயனில்லை. முக்கியமாக கற்பு என்றால் என்ன என்றே அறியாத சிறுவயது பிள்ளைகளின் நடவடிக்கைகளில் எப்போதும் அவதானமாக இருக்க வேண்டும். காமுகர்கள் அப்பிள்ளைகளின் அறியாமையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். எமது பிள்ளைகளின் அழிவுக்கு நாமே சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்காமல் இருப்போம்.