குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Wednesday, September 28, 2011

கொடூரமாக கொலை செய்யப்படும் யாசகர்கள்.

இரவு வேளையில் தெரு மருங்குகளில் தங்கியிருக்கும் அநாதவரானன நபர்களின் தலைகளைத் தாக்கி கொலை செய்யும் அராஜக திட்டம் ஒன்று கொழும்பிலும் அதன் அண்மித்த பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.

கொழும்பிலும் அதன் அண்மித்த பகுதிகளிலும் தங்கியிருந்த அநாதவரான நபர்கள் மற்றும் யாசகர்கள் 20 பேர் வரை கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எந்த வித சாட்சியங்களும் இன்றி இக்கொலைகள் இடம்பெற்றுள்ளதோடு புலனாய்வுப் பிரிவினர் கொலைகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட போதிலும் எந்தவித தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் பிச்சை எடுத்து வைத்திருக்கும் பொட்டலங்களுடன் தெருவோரங்களில் படுத்துறங்குகின்றபோது இப்பொட்டலங்களை இலக்குவைத்தே இக்கொலைகள் இடமபெறுவதாக நம்பப்படுகின்றது.

நாய்க்குட்டியை பிரசவித்த பூனை


இதற்கு முன்னர் ஆடு ஒன்று நாய்குட்டி போட்ட சம்பவம் இடம்பெற்றது. தற்போது பூனை நாய்குட்டி போட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது. சீனாவில் காணப்படும் ஒரு பூனை நாய்க்குட்டியை பிரசவித்துள்ளது.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆம் இந்த தகவல் பற்றிய மேலதிக விபரம் பின்வருமாறு:-
கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் சவ் யுன் என்பவர் பூனை ஒன்றினை வளர்த்து வந்துள்ளார். பின்னர் அந்த பூனை கர்ப்பமடைந்து இரண்டு குட்டிகளை பிரசவித்தது.
இது பற்றி உரிமையாளர் சவ் யுன் கூறுகையில் நான் சென்று பார்க்கும் போது அது தனது இரண்டு குட்டிகளையும் வாயில் கவ்விக்கொண்டு நின்றது. நான் அருகில் சென்று பார்த்ததும் வியந்து போனேன்.
அதில் ஒரு குட்டி நாய்க் குட்டியாக காணப்பட்டது என தெரிவித்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து அங்குள்ள யாங்சன் என்பவர் பத்திரிகையாளர்களை அழைத்து இச்சம்பவத்தினை விபரித்தார்.

Friday, September 16, 2011

வானத்து நிலவைப் பிடித்து
என்னவள் கையில் கொடுத்தேன்.....

கையில் எடுத்தவள் - என்
கன்னத்தில் கொடுத்ததாள் முத்தம்....

எல்லைதாண்டிய இன்பத்தில்
நான் மிதந்தேன் - இன்னும்
கனவு கலையவில்லையே....