குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Friday, November 4, 2011

உலகின் பலம்வாய்ந்தவர்கள் பட்டியல்

2011ஆம் ஆண்டில் உலகத்தில் மிகவும் பலம்வாய்ந்தவர்கள் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முதலிடத்தைப் பிடித்துள்ளார். சீனப் பிரதமர் ஹ¥ ஜிந்தாவோ, ரஷ்யப் பிரதமர் விலாடிமீர் புட்டீன் ஆகியோரைப் பின்தள்ளி அமெரிக்க ஜனாதிபதி இப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்காவின் போர்பஸ் சஞ்சிகை வெளியிட்டிருக்கும் உலகில் மிகவும் பலம்வாய்ந்தவர்கள் பட்டியலின் 11வது இடத்தை இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி பிடித்திருப்பதுடன், 19வது இடத்தை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பிடித்துள்ளார்.
அல்குவைதா தலைவர் ஒசாமா பின்லேடன் மற்றும் லிபியாவின் முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி ஆகியோர் கொல்லப்பட்டதன் பின்னர் ஒபாமாவுக்கான ஆதரவு அதிகரித்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மிகவும் சக்தி மிக்க பெண்மணிகள் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த ஜேர்மனின் தலைவர் அஞ்செலா மேர்கல் சக்தி மிக்க தலைவர்கள் பட்டியலில் 4வது இடத்தைப் பெற்றுள்ளார்.
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ரஷ்யாவின் பிரதமர் விலாடிமிர் புட்டின் காணப்படுவதுடன், மூன்றாவது இடத்தில் சீனப் பிரதமர் ஜிந்தாவோ காணப்படுகிறார்.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவுனர் பில்கேட்ஸ் இப்பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளதுடன், பேஸ்புக் எனும் சமூக வலைப்பின்னலின் தலைவரான மார்க் சக்கபேர்க் 9வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

கிறீன்விச் நேரம் மாறப்போகின்றது


சர்வதேச நேரக் கணிப்பீடாக கடந்த 120 ஆண்டுகளாக இருந்துவரும் கிறீன்விச் நேரக்கணக்கு குறித்து மாற்றம் ஒன்றை கொண்டு வரக்கூடிய பிரேரரண பற்றி விவாதிக்க உலகின் முன்னணி விஞ்ஞானிகள் பிரித்தானியாவில் ஒன்று கூடுகின்றனர். இம்மாநாட்டின் முடிவு கிறீன்விச் நேரக்கணக்கு வரலாற்றில் ஒரு அடிக்குறிப்பாக போய்விடும் என்று கருதப்படுகின்றது.

120 வருடங்களாக சர்வதேச நேரக்கணக்கீடாக கிறீன்விச் நேரம் மதிக்கப்பட்டு வருகின்றது. கிறீன்விச் நேரக்கணக்கீடு பூமியின் சுழற்சியைக் கொண்டு கணக்கிடப்படவில்லை என்றும் அதன் கணக்கீடு அணுச்சக்தி மணிக்கூடுகளைக் கொண்டே கிறின்விச் நேரம் கணக்கிடப்படுவதாகவும் புதிய கருத்து உருவாகியுள்ளது.

அதனால் கிறீன்விச் நேரக்கணக்கிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவின் எதிர்ப்புக்கு மத்தியிலும் கிறீன்விச் நேரத்திற்கு பதிலாக புதிய நடவடிக்கையை எடுப்பது பற்றி ஜனவரியில் கூடி முடிவு செய்வதற்காக சர்வதேச தொலைத்தொடர்பு யூனியன் ஜெனிவாவில் கூட இருக்கின்றது. கிறீன்விச் நேரத்திற்கு பதிலாக புதிய நேரத்திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று பிரான்ஸ் அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது.

வைத்தியர் நோயைக் கண்டுபிடிப்பது எப்படி?


ஒரு வைத்தியரிடம் நீங்கள் செல்லும் அடிப்படையில் அவர் முதலில் உங்களோடு உரையாடுவார், பின்பு உங்களை சோதித்துப் பார்ப்பார்,பின்பு சில மருத்துவச் சோதனைகள் செய்யும் படி கேட்பார், பின்பு உங்களுக்குரிய மருந்துகளை கொடுப்பார்.

என்ன அடிப்படையில் மருத்துவர் உங்கள் நோயை இனங்காண்கிறார் என்பதைப்பற்றி ஒரு அடிப்படை அறிவைத் தருவதற்காகவே இந்தப் பதிவு.

முதலில் உங்களோடு உரையாடும் போது வைத்தியர் உங்கள் நோயின் அறிகுறிகளை மனதிலே குறித்துக் கொள்வார். அந்த அறிகுறிகளின் அடிப்படையில் உங்களுக்கு இருக்கக் கூடிய சாத்தியமான நோய்களை மனதிலே பட்டியல் இட்டுக் கொள்வார்.

இந்தப் பட்டியலில் உள்ள நோய்களில் உள்ள நோய்களின் போது உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் உடலில் சில மாற்றங்கள் ஏற்படலாம். உங்களைச் சோதிக்கும் போது அப்படி ஏதாவது அவர் பட்டியல் இட்ட நோய்களுக்குரிய அடையாளங்கள் உள்ளதா என்று அவதானிப்பார். இப்போது உங்களுக்குத் சாத்தியமான நோய்களின் பட்டியல் சிறிதாகிவிடும். அதாவது நீங்கள் சொன்ன அறிகுறிகளை வைத்து அவர் மனதிலே உருவாகியஅந்த பட்டியல் உங்களை சோதித்த பின்பு இன்னும் சிறிதாகி இப்போது உங்களுக்கு சாத்தியமான ஒரு சில நோய்களில் உங்களுக்கு உண்மையில் என்ன நோய் இருக்கினறது என்று உறுதிப் படுத்திக் கொள்ள அவருக்கு குறிப்பிட்ட மருத்துவச் சோதனைகள் தேவைப்படலாம்.


உதாரணமாக இரத்தப் பரிசோதனைகள், சிறுநீர்ப் பரிசோதனை , எக்ஸ்ரே பரிசோதனை போன்றவை.சில நோய்கள் வெறுமனே உங்கள் அறிகுறிகள் மற்றும் வைத்திய உங்களைச் சோதிக்கும் போது காணும் அடையாளங்களை வைத்தே அறியப் பட்டு விடலாம்.அந்த நேரத்தில் எந்த விதமான மருத்துவப் பரிசோதனைகளும் இல்லாமலேயே உங்களுக்கு மருந்து வழங்கப் படலாம்.

இறுதியாக உங்கள் நோய் நிச்சயமாக உறுதிப்படுத்தப்பட்ட பின்பு, உங்கள் வயது, பால், பொருளாதார நிலைக்கு ஏற்ப உங்களுக்குரிய மருந்துகளை வழங்குவார்.


அதாவது ஒரே நோய்க்கு பல விதமான மருந்துகள் இருக்கின்றன , சில சிருவர்கலிலே பாவிக்க முடியாது, சில கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க முடியாது , சில மருந்துகள் விலை உயர்ந்தவை எல்லோருக்கும் கொடுக்க முடியாது, சில பாலூட்டம் கொடுக்கும் அன்னையருக்கு கொடுக்க முடியாது, இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டே வைத்தியர் ஒருவருக்குரிய மாத்திரைகளை நிர்ணயிப்பார்.

புற்றுநோயைக் குணப்படுத்தும் ஒட்டகப் பால்


அரபு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ஒருவகை மருந்தை தயாரித்துள்ளனர். இந்த மருந்து புற்று நோயை குணமாக்கும் தன்மை உடையது என் தெரியவருகிறது. விஞ்ஞானிகள் எலிக்கு புற்றுநோயை உருவாக்கி இந்த மருந்தை 6 மாதகாலமாக எலிக்கு செலுத்தி வந்தனர். எலியின் உடலில் இருந்த புற்றுநோய்க் கலங்கள் அகன்று வீரியத்துடன் கூடிய புதிய கலங்கள் உருவாகின. இதில் எலிக்கு புற்றுநோய் முற்றிலும் குணமாகிவிட்டது.

ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மருந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது புற்றுநோய் கலங்களை அழித்துவிட்டு புதிய கலங்களை உருவாக்குகிறது. இந்த மருந்தால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படுவது இல்லை. எனவே, மனிதர்களுக்கும் இந்த மருந்தை பயன்படுத்தி புற்றுநோயை சரியாக்கி விடலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதற்காக அடுத்த கட்டமாக மனிதர்களுக்கு இந்த மருந்தை செலுத்தி ஆய்வுசெய்ய இருக்கிறார்கள்.

Wednesday, November 2, 2011

வேலாயுதம்









மீண்டும் ஒரு விஜய் படம். காமெடி, காதல், தங்கச்சி பாசம், அவ்வப்போது சென்டிமெண்ட், கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் பஞ்ச் வசனங்கள், சுயபுராணம், லாஜிக்குக்கு சம்பந்தமே இல்லாத ஆக்ஷன் என பக்கா விஜய் படம்.

 ஆனால் வேட்டைக்காரன், சுறா மாதிரி சோதிக்காமல் ரசிக்கும்படி காட்சிகளை அமைத்ததில், இயக்குநர் ஜெயம் ராஜா விஜய்யோடு சேர்ந்து ஜெயித்திருக்கிறார்!
 பத்தாண்டுகளுக்கு முன்பு திருப்பதிசாமி எழுதி இயக்கிய ஆசாத் படத்தின் தழுவல் இந்தப் படம் (அதற்கும் முன்பு அமிதாப் நடித்த ஒரு இந்திப் படத்திலிருந்துதான் திருப்பதிசாமி உருவியிருந்தார்!).

ஒரு நிருபரின் கற்பனைப் பாத்திரம், தற்செயலாக உயிர்பெற்றால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்ய கேள்வியின் விளைவு, வேலாயுதம்!

ஜெனிலியா ஒரு சேனல் நிருபர். உயர்மட்ட ஊழல்களை அம்பலப்படுத்த முனைகிறார், தனது ஸ்டிங் ஆபரேஷன் மூலம். அமைச்சர் ஒருவர் தொடர்பான வெடிகுண்டு சதியை, அவரது தொடர்பு இருப்பது அறியாமல் நண்பர்களுடன் ஜெனிலியா ஆராய முனைய, அதில் நண்பர்கள் கொல்லப்படுகிறார்கள்.

கத்திக் குத்தோடு ஜெனிலியா தப்பிக்கிறார். அப்போது சென்னையில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிக்கப் போகும் அபாயம் அவருக்கு தெரிய வருகிறது, தன்னைத் தாக்கிய ரவுடிகள் மூலம்.

எதிர்பாராத விதமாக அந்த ரவுடிகள் ஒரு விபத்தில் எரிந்து போகின்றனர். அப்போதுதான் கற்பனையாக வேலாயுதம் என்ற பாத்திரத்தை அவர் உருவாக்குகிறார். இந்த ரவுடிகளைக் களையெடுத்தது வேலாயுதம்தான் என்று பரப்பிவிடுகிறார் ஜெனிலியா.

ஒவ்வொரு விபத்து நேரும் முன்னும் மக்கள் அதிலிருந்து காப்பாற்றப்படுகிறார்கள். காரணம் வேலாயுதம் என்று ஜெனிலியா பரப்ப ஆரம்பிக்க, வேலாயுதம் பெயரை நெஞ்சில் பச்சைக் குத்தும் அளவுக்குப் போகிறார்கள் மக்கள்.

யதேச்சையாக நடக்கும் இந்த விஷயங்களின் போதெல்லாம், யதேச்சையாகவே சம்பந்தப்படுகிறார் ஒருவர். அவர் பெயரும் வேலாயுதம்தான்… நம்ம ஹீரோ பால்கார விஜய். சிட்பண்டில் போட்ட பணத்தை தங்கை திருமணத்துக்காக எடுக்க கிராமத்திலிருந்து சென்னை வரும் அவர், தனக்கே தெரியாமல் ஒவ்வொரு முறையும் குண்டு வெடிப்பிலிருந்து மக்களைக் காக்கிறார்.

சூழ்நிலை, அவரையும் ஜெனிலியாவையும் சந்திக்க வைக்கிறது. தான்தான் மக்களைக் காப்பாற்றினோம் என்பதே தெரியாமல், யாருங்க அந்த வேலாயுதம் என ஒருமுறை ஜெனிலியாவை இவர் கேட்க, ‘அது நீங்கதான்’ என ஜெனிலியா கூற, ஷாக் அடித்து நிற்கிறார் விஜய். ஆனாலும் இதெல்லாம் வேலைக்காகாது ஆளை விடுங்கள் என கிராமத்துக்கு போகும் விஜய், பின்னர் பொங்கியெழுந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்றும் சூப்பர் ஹீரோவாகிறார்.

அது எப்படி, ஏன் என்பது நீங்கள் திரையில் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான முடிச்சுகள்!


ஜனரஞ்சகப் படங்கள் என்றால் நம்ப முடியாத காட்சிகள் இருந்தே தீர வேண்டும் என்பது நமது ஹீரோக்களும் இயக்குநர்களும் மனதில் வரித்துக் கொண்ட விஷயங்கள். அதற்கு சரியான உதாரணம் வேலாயுதம் படத்தின் இறுதியில் விஜய் ரயிலை நிறுத்தும் அந்தக் காட்சி. சான்ஸே இல்லை… இது அசல் ஆந்திரத்து இறக்குமதி என கட்டியம் கூற இது ஒன்று போதும்!

வழக்கமான மசாலா படம்தான் என்றாலும், காட்சிகளில் அதை சுவாரஸ்யப்படுத்தியிருப்பதில் ரீமேக் ஸ்பெஷலிஸ்ட் ராஜா, தனித்துத் தெரிகிறார்.

சாதாரணமாகவே காமெடியில் புகுந்து விளையாடுவார் விஜய். உடன் சந்தானம் வேறு சேர்ந்தால் கேட்கவா வேண்டும். ரகளை பண்ணுகிறார்கள்.

அதுவும் உடைமாற்றும் அறையில் ஜெனிலியாவை ‘முன்னே’ பார்த்துவிடும் விஜய், சண்டைக் கோழியாக சிலுப்பிக் கொண்டு நிற்கும் ஜெனிலியாவிடம் வேணும்னா நீயும் பார்த்துக்க என தன் முன்பக்கத்தைக் காட்ட, அதற்கு சந்தானம் அடிக்கும் கமெண்ட் அக்மார்க் கவுண்டர் குறும்பு. அரங்கம் சிரிப்பில் வெடிக்கிறது!


தங்கையோடு அவர் பாசமலர் படம் பார்க்கும் காட்சி, இன்னொரு டைமிங் காமெடி வெடி!

முதல்பாதி எப்படி போகிறதென்றே தெரியவில்லை. அத்தனை பரபர வேகம். கலகலப்பான காட்சிகள். ஆனால் பின் பாதியில் ஏக ஆக்ஷன், தேவையற்ற பஞ்ச்கள், அல்லக்கைகள் உசுப்பேத்தும் காட்சிகள் என ஸ்பீட் பிரேக்கர்கள் அதிகம்.

அதிலும் கடைசி காட்சியில் விஜய் வெற்றுடம்போடு வந்து போகிறார். இந்தக் காட்சியின் அவசியத்தை இயக்குநர்தான் விளக்க வேண்டும். அரசியல் ஆசை உள்ளுக்குள் இருந்தாலும், இப்போதைக்கு வெளியில் காட்டினால் ஆபத்து என விஜய்யின் உள்மனது சொல்வது, வசனங்களில் பிரதிபலிக்கிறது!


விஜய்யின் நடிப்பில் வழக்கத்தை விட கூடுதல் துள்ளல். வசன உச்சரிப்பு கூட இதில் வித்தியாசமாக உள்ளது. வரவேற்கத் தக்க மாறுதல்தான்!


இன்னும் ஓரிரு காட்சிகள் அதிகமாக வந்திருந்தால் கூட, ஹீரோ சந்தானமாப்பா என்று கேட்டிருப்பார்கள். மனிதர் அப்படி போட்டுத் தாக்குகிறார்.

ஒரு டெலிவிஷன் பத்திரிகையாளராக ஜெனிலியா ஓகேதான். அவரும் விஜய்யும் மோதிக் கொள்ளும் காட்சிகளில் அத்தனை இயல்பு.

ஹன்ஸிகா மோத்வானிக்கு கொடுத்த வேலை ரசிகர்களுக்கு மயக்க மருந்து அடிப்பது. அதற்கு தனது உடல் அழகை கச்சிதமாக உபயோகித்திருக்கிறார்.

தங்கை சரண்யா மோகன் வரும் காட்சிகள் திருப்பாச்சியை நினைவுபடுத்துகின்றன. எம்எஸ் பாஸ்கர், பரோட்டா சூரி, பாண்டி என அனைவரும் தங்கள் பங்கை சரியாகவே செய்துள்ளனர்.

ப்ரியனின் ஒளிப்பதிவும், விஜய் ஆன்டனியின் இசையும் இயக்குநருக்கு மிகவும் கை கொடுத்துள்ளன. ஆனால் அந்த சொன்னா புரியாது பாடலை மட்டும் வேறு பாடகரை பாட வைத்திருக்கலாம்.

கடைசி பத்து நிமிடம் வழக்கம் போல விஜய் பேசிக் கொண்டே போகிறார். இந்த மாதிரி காட்சிகள்தான் அவர் மீது மற்ற ரசிகர்களுக்கு கடுப்பை வரவழைப்பவை.

மற்றபடி இரண்டாம் பாதியில் ஆக்ஷன் காட்சிகளைக் குறைத்து, இரண்டு பாடல்களை வெட்டி, நறுக்குத் தெரித்த மாதிரி வசனங்களை வைத்திருந்தால், விஜய் படங்களில் வித்தியாசமானதாக வந்திருக்கும் வேலாயுதம்.

எது எப்படிப் போனாலும் இந்த வேலாயும் படம் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்கு ஆப்பு வைப்பதாகவே உள்ளது. தமிழ் சினிமா எப்போதும் முஸ்லிம் மக்களை தீவிரவாதிகளாகவே காட்டுகிறது. இந்த வேலாயுதம் மட்டுமல்ல இதற்கு முன்னர் வந்த எத்தனையோ படங்கள் இந்தமாரியாக தமிழ் முஸ்லிம்களிடையே பகையை தூண்டுவதாய் இருக்கிறது.

ஆனாலும் எடுத்த வரை, நல்ல பொழுதுபோக்குப் படம் பார்த்த திருப்தியைக் கொடுத்திருக்கிறார்கள் விஜய்யும் ராஜாவும்!

Wednesday, September 28, 2011

கொடூரமாக கொலை செய்யப்படும் யாசகர்கள்.

இரவு வேளையில் தெரு மருங்குகளில் தங்கியிருக்கும் அநாதவரானன நபர்களின் தலைகளைத் தாக்கி கொலை செய்யும் அராஜக திட்டம் ஒன்று கொழும்பிலும் அதன் அண்மித்த பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.

கொழும்பிலும் அதன் அண்மித்த பகுதிகளிலும் தங்கியிருந்த அநாதவரான நபர்கள் மற்றும் யாசகர்கள் 20 பேர் வரை கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எந்த வித சாட்சியங்களும் இன்றி இக்கொலைகள் இடம்பெற்றுள்ளதோடு புலனாய்வுப் பிரிவினர் கொலைகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட போதிலும் எந்தவித தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் பிச்சை எடுத்து வைத்திருக்கும் பொட்டலங்களுடன் தெருவோரங்களில் படுத்துறங்குகின்றபோது இப்பொட்டலங்களை இலக்குவைத்தே இக்கொலைகள் இடமபெறுவதாக நம்பப்படுகின்றது.

நாய்க்குட்டியை பிரசவித்த பூனை


இதற்கு முன்னர் ஆடு ஒன்று நாய்குட்டி போட்ட சம்பவம் இடம்பெற்றது. தற்போது பூனை நாய்குட்டி போட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது. சீனாவில் காணப்படும் ஒரு பூனை நாய்க்குட்டியை பிரசவித்துள்ளது.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆம் இந்த தகவல் பற்றிய மேலதிக விபரம் பின்வருமாறு:-
கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் சவ் யுன் என்பவர் பூனை ஒன்றினை வளர்த்து வந்துள்ளார். பின்னர் அந்த பூனை கர்ப்பமடைந்து இரண்டு குட்டிகளை பிரசவித்தது.
இது பற்றி உரிமையாளர் சவ் யுன் கூறுகையில் நான் சென்று பார்க்கும் போது அது தனது இரண்டு குட்டிகளையும் வாயில் கவ்விக்கொண்டு நின்றது. நான் அருகில் சென்று பார்த்ததும் வியந்து போனேன்.
அதில் ஒரு குட்டி நாய்க் குட்டியாக காணப்பட்டது என தெரிவித்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து அங்குள்ள யாங்சன் என்பவர் பத்திரிகையாளர்களை அழைத்து இச்சம்பவத்தினை விபரித்தார்.

Friday, September 16, 2011

வானத்து நிலவைப் பிடித்து
என்னவள் கையில் கொடுத்தேன்.....

கையில் எடுத்தவள் - என்
கன்னத்தில் கொடுத்ததாள் முத்தம்....

எல்லைதாண்டிய இன்பத்தில்
நான் மிதந்தேன் - இன்னும்
கனவு கலையவில்லையே....

Monday, August 22, 2011


அவர்கள் கறுப்பு நிறத்தில் உடையணிந்தவர்கள். முகத்திலும் கறுப்பு நிற கிறீஸ் பூசிக் கொண்டவர்கள். விரல்களில் கூரிய போலி நகங்களை அணிந்திருப்பவர்கள். பெண்களைத் தாக்குபவர்கள். அத்தோடு நன்றாக ஓடக் கூடியவர்கள். எந்த உயரத்திலிருந்தும் குதிக்கக் கூடியவர்கள். இப்படிப் பல கதைகள் அம் மர்ம மனிதர்களைப் பற்றி அன்றாடம் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன.


பல பெண்கள் இம் மர்ம மனிதர்களால் காயமடைந்திருக்கின்றனர். சாட்சிகளாக அவர்களது உடல்களில் நகக் கீறல் காயங்கள் இருக்கின்றன. தாக்குதலுக்குள்ளாகியும், நேரில் கண்டு பயந்த காரணத்தினாலும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் இன்னும் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் எனும்போது அவற்றில் ஏதோ விடயம் இருக்கின்றதென்றே எண்ணத் தோன்றுகிறது. இதனை வதந்தி என்று சொல்லி முழுவதுமாக அப்புறப்படுத்தி விடவும் முடியாது. ஒரு சிறு வதந்தியானது, இலங்கையிலுள்ள சிறுபான்மை இன மக்கள் செறிந்து வாழும் பகுதியெங்கிலும் ஒரே நேரத்தில் ஒரே அச்சத்தை ஏற்படுத்தி விட வாய்ப்பில்லை அல்லவா?

அண்மையில் இடம்பெற்ற பொத்துவில் கலவரத்தின் பின்னணியிலும் இதுவே இருந்தது. தற்போதைய கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களின் அமைதியற்ற சூழலுக்கும் இதுவே காரணமாகியிருக்கிறது. அத்தோடு மர்ம மனிதர்கள் ஒளிந்திருந்த பாழடைந்த வீட்டுக்குள்ளிருந்து காவல்துறை சீருடைகள், ஹெல்மட்டுக்கள், இன்னும் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. எனில் இவ் வதந்தியின் பின்னணியில் நாம் இன்னும் அறிந்து கொள்ளாத ஏதோ ஒரு சக்தியும், செய்தியும் இருக்கத்தானே செய்கிறது? அது என்னவென்று கண்டுபிடிக்க இந்த வதந்தியை ஆராயத்தானே வேண்டும்?

இவற்றை ஆராய்ந்து சொல்லும் என முழுவதுமாக இனி அரசை நம்பிப் பயனில்லை. அது தொடர்ந்து மக்களை ஏமாற்றுவதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. எனினும் இதற்காக சட்டத்தை தமது கையில் எடுத்துக் கொள்வதானது பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என பொதுமக்கள் அஞ்சுகின்றனர். அத்தோடு அகப்படும் ஒருவரைப் பிடித்து, ஊர்மக்கள் நூறு பேர் சேர்ந்து தாக்குவது என்பது மனிதாபிமானமற்ற செயல் என்பதால்தான் காவல்துறையிடம் கொண்டு போய் ஒப்படைக்கின்றனர். ஒப்படைக்கப்படும் நபர்களை விடுதலை செய்துவிட்டு, சந்தேக நபர்களைக் கொண்டு வந்தவர்களைத் தாக்கும் நடவடிக்கையை காவல்துறை இலகுவாகச் செய்து வருகிறது. இதுவரைக்கும் இவ்வாறான சந்தேக நபர்கள் 40 பேரளவில் ஒவ்வொரு ஊர் பொதுமக்களிடமும் அகப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் அனேகமானோர் காவல்படையைச் சேர்ந்தவர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவையெல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போதும், அரசாங்கமானது இவையெல்லாவற்றையும் வதந்தி எனச் சொல்லித் தப்பிக்கப் பார்க்கும் போதும், மறைவாக ஏதோ உள்ளே இருக்கின்றது என்பதைத் தெளிவாக உணர முடிகிறது. அது என்ன என்பதற்கான தேடல்தான் எத்தரப்பிலிருந்தும் இன்னும் உறுதியான முறையில் ஆரம்பிக்கப்படவில்லை. காரணம், அவ்வாறு ஆரம்பிக்கப்படுவதன் முதல் எதிரி அரசாங்கமாக இருப்பதுதான். எனவே ஒட்டுமொத்தமாக மக்களின் சந்தேகமானது அரசாங்கத்தின் மீதே எழுந்திருக்கிறது என்பது வெளிப்படையானது.

அரசாங்கத்தின் மீதான இது போன்ற நியாயமான சந்தேகங்கள் எழக் காரணங்களும் இல்லாமல் இல்லை. ஊர்மக்கள் இரவுகளில் விழித்திருந்து பிடித்துக் கொடுத்த சந்தேக நபர்களை காவல்துறையானது எந்த நடவடிக்கையும் எடுக்காது, விடுதலை செய்திருக்கிறது. சாதாரண ஒரு முறைப்பாட்டுக்கே சந்தேக நபர்களை அடித்து உதைத்து விசாரிக்கும் இலங்கைக் காவல்துறையானது, ஒரு ஊரே சேர்ந்து கொடுத்த முறைப்பாட்டைக் கண்டுகொள்ளாமல் சந்தேக நபர்களை விடுவித்ததெனில், பொதுமக்களுக்கு சந்தேகம் யார் மேல் எழும்? அதுவும் எல்லா ஊர்களிலும் இதே நடைமுறை எனும்போது இவ்வாறான சந்தேகம் எழுவது நியாயம்தானே?

இந்த மர்ம மனிதர்கள் குறித்து பலவிதமான எண்ணக் கருக்கள் மக்கள் மத்தியில் உள்ளன. அவற்றில் பிரதானமாகவும் நியாயமானதாகவும் எடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு எண்ணக் கருவை முதலில் பார்ப்போம். யுத்த காலத்தில் களத்துக்கு அனுப்ப வேண்டி, இலங்கை இராணுவத்துக்கு நிறைய ஆட்கள் தேவைப்பட்டனர். அதற்காக கிராமங்கள் தோறும், உடனடியாகவும் அவசரமாகவும் இளைஞர்களைத் திரட்டி எடுத்தனர். அவசர காலத்தில் இவ்வாறு சேர்த்துக் கொள்ளப்பட்ட இராணுவ வீரர்களுக்கு பெரிதாக கல்வியறிவு இருக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. சம்பளமும் அதிகம். கிராமங்களில் அந் நேரம் இராணுவத்தினர் மிகவும் கௌரவத்துக்குரியவர்களாகக் கருதப்பட்டனர். எனவே வேலையற்ற கிராமத்து இளைஞர்கள் அனேகம்பேர் உடனடியாக இராணுவத்தில் இணைந்தனர். அக் கிராமத்து இளைஞர்களிடம் இராணுவத்துக்குத் தேவையற்றதும் குழப்பங்களை ஏற்படுத்தக் கூடியதுமான �மனிதாபிமானம்� நிறைந்திருந்தது. அவர்களை மூளைச் சலவை செய்யாமல் களத்துக்கு அனுப்பினால் எதிராளியைக் கொல்லத் தயங்குவர் என்பதை உணர்ந்த இராணுவம், அவர்களை மூளைச் சலவை செய்தது. போர்ப் பிரதேச மக்களையும் எதிரிகளாகப் பார்க்கும் மனநிலையை அவர்களுக்குள் தோற்றுவித்தது.

மூளைச் சலவை செய்யப்பட்ட இளைஞர்களால் சிறிதும் மனிதாபிமானமற்ற முறையில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். யுத்தம் நிறைவுற்றது. பல ஆண்டுகளாக நீடித்த போரில் அரசாங்கம் வென்று மார்தட்டிக் கொண்டது. இராணுவத்தினர் கொண்டாடப்பட்டனர். காலங்கள் சென்றன. இராணுவத்தில் தேவைக்கும் அதிகமாக இராணுவ வீரர்கள் செறிந்திருந்தனர். பிரதான வீதிகளிலிருந்த இராணுவக் காவலரண்களும் அகற்றப்பட்டதன் பின்னர், அவர்களுக்குச் செய்யவென எந்த வேலையும் இல்லை. அவர்களை மக்களும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. காய்கறிகள், தேங்காய்களை விற்கவும், வீதிச் செப்பனிடல் பணிகளிலும், மைதானத் திருத்த வேலைகளிலும் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டது அரசாங்கம். இந் நிலையில் ஆயிரக் கணக்கான இராணுவ வீரர்கள் தப்பிச் சென்றனர். அரசாங்கம் அதைப் பெரிதாகக் கவனத்தில் கொள்ளவில்லை. வெறுமனே சம்பளம் கொடுத்து வைத்திருப்பதை விடவும் தப்பிச் சென்றது நல்லதென அரசாங்கம் கருதியிருக்கக் கூடும்.

தப்பிச் சென்றவர்களுக்கு பகிரங்கமாக வேறு தொழில் தேட முடியாது. அரசாங்கம் வழங்கிய ஆயிரக்கணக்கான ரூபாய்களைக் கொண்டு, செழிப்பானதொரு வாழ்க்கைக்குப் பழகியிருந்த அவர்களுக்கு வீட்டின் தற்போதைய வறுமை நிலை பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும். எனவே அவர்களால் செய்ய முடியுமான இலகுவான வேலையாக திருட்டையும், பணத்துக்காக எதையும் செய்வதையும் தவிர்த்து வேறென்ன இருக்க முடியும்? அதுவும் மூளைச்சலவை செய்யப்பட்ட அவர்களிடம் மனிதாபிமானமும் இருக்காது. அவ்வாறானவர்கள்தான் இவ்வாறு சிறுபான்மை இன மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இரவு நேரங்களில் உலவுகின்றனர் என மக்கள் கருதுகின்றனர்.

அத்தோடு இன்னுமொரு எண்ணம், படித்தவர்கள் மத்தியில் உலவுகிறது. யுத்தம் நிறைவுற்றதற்குப் பிறகு அவசர காலச் சட்டத்தை விலக்கக் கோரி பல மனுக்கள் அரசை நோக்கி வந்த வண்ணம் உள்ளன. அச் சட்டத்தை நீக்கினால் பல நஷ்டங்களைச் சந்திக்க நேருமென்ற அச்சம் அரசாங்கத்திடம் உள்ளது. எனவே ஊர்கள் தோறும் ஒரு பதற்ற நிலையை ஏற்படுத்தினால் அச் சட்டத்தை நீக்க வேண்டிய தேவையிருக்காது என அரசாங்கம் எண்ணியிருக்கலாம் எனவும் பலர் கருதுகின்றனர்.

அதே போல அண்மைக்காலமாக அரசுக்குப் பல நெருக்கடிகள் பொதுமக்கள் மூலமாக ஏற்படத் தொடங்கியுள்ளன. கட்டுநாயக்கவில் அரசாங்கத்தை எதிர்த்து நின்ற ஊழியர்களின் ஆர்ப்பாட்டம், சேனல் 4 கிளப்பிய சிக்கல்கள், கலப்படப் பெற்றோல் இறக்குமதியால் எழுந்த பிரச்சினைகள், தற்போதைய கலப்பட சீமெந்தால் எழுந்துள்ள பிரச்சினைகள், விலைவாசி அதிகரிப்பால் எழுந்துள்ள கொந்தளிப்புக்கள், நாட்டில் ஏற்பட்டுள்ள வறுமை நிலை எனப் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ள நிலையில் தற்போது அரசாங்கம் உள்ளது. இப் பிரச்சினைகளின் உண்மை நிலையை அறியவென மக்கள் கிளம்பினால், தற்போதைய ஆட்சிக்கு அது பங்கம் விளைவிக்கும். எனவே இவற்றின் மீதுள்ள மக்களின் கவனத்தைத் திசை திருப்பவேண்டியும், இவ்வாறான மர்ம நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டிருக்கக் கூடும் என்பதுவும் அரசியலில் ஈடுபாடு கொண்ட பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.

'எல்லாள மன்னனைப் போரில் வென்ற துட்டகைமுனு மன்னனுக்குச் சொந்தமான போர்வாளைக் கண்டுபிடித்துத் தன்னகத்தே வைத்திருக்கும் அரசனின் ஆட்சி நீடிக்கும்' என்ற ஆதி நம்பிக்கைக்கிணங்கி, ஜனாதிபதி ஒவ்வொரு ஊருக்கும் இராணுவத்தினரை இரவில் அனுப்பி அவ் வாளைத் தேடுகிறார் என்பது பாமர மக்களின் கருத்து.

எவ்வாறாயினும் எல்லோரையும் பீதியில் ஆழ்த்தியிருக்கும் இம் மர்ம மனிதர்கள் அரசைச் சார்ந்தவர்கள் என்பது மட்டும் எல்லோரதும் ஒருமித்த ஏக கருத்தாக இருக்கிறது. அவ்வாறில்லையெனில் அதனை நிரூபிக்க வேண்டியதுவும், சம்பந்தப்பட்ட மர்ம மனிதர்கள் யாரெனக் கண்டுபிடிப்பதுவும் அரசின் அத்தியாவசியமான கடமையாக உள்ளது.


 எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி இணையம்

Wednesday, August 17, 2011

முஸ்லிம் பெண்கள் கவனமாக இருங்கள்





FACE BOOK போன்ற தளங்களில் தங்கள் புகைப்படத்தை வெளியிடும் பெண்களின் எண்ணிக்கை குறிப்பாக முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இது போன்ற புகை படங்களை எடுத்து எப்படி வேண்டுமானாலும் கிராபிக்ஸ் செய்ய... முடியும் என்று இந்த பெண்களுக்கு தெரியவில்லையா. அல்லது எதற்கும் தயார் என்றுதான் தங்கள் புகைப்படங்களை காட்சிக்கு வைக்கிறார்களா தெரியவில்லை? இந்துத்வா சக்திகள் முஸ்லிம் பெண்களை குறி வைத்து அனைத்து தளங்களிலும் வலை விரித்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் தாங்களாகவே வலையில் விழ துடிக்கும் சகோதரிகள் திருந்துவார்களா? FACE BOOK தங்கள் புகை படத்தை அளித்திருக்கும் உங்களுக்கு தெரிந்த அனைத்து முஸ்லிம் பெண்களுக்கும் இந்த செய்தியை சொல்லுங்கள்.புகைப்படத்தை எடுக்க மறுக்கும் முற்போக்கு மூதேவிகளை விட்டு தள்ளி பல அப்பாவி பெண்களின் வாழ்வை காப்பாற்ற உதவுங்கள்.

 பேஸ்புக் அங்கத்துவர் ஒருவர்

Thursday, August 11, 2011

தாய்லாந்தில் பிரபல்யமாகியுள்ள மிரட்டும் இராட்சத மோட்டார் சைக்கிள் *


பேங்காக்கை தளமாக கொண்ட ரூங்க்ரொஞ்சா சாங்நோங்பிரிசார்ன் எனும் கலைஞர் உருவாக்கிய 'பிரடேட்டரை' ஒத்த மோட்டர் சைக்கிள் இது. பயன்படுத்தவே முடியாது என வீசப்படும் கார் இரும்பு பாகங்களையும், சைக்கிள் பாகங்களையும் கொண்டு மிரட்டும் இந்த இராட்சத மோட்டார் சைக்கிளை உருவாக்கியிருக்கிறார். 54 வயதான குறித்த கலைஞர் இவ்வாறான கலைவடிவ பொருட்கள் உருவாக்குவதற்கென தாய்லாந்தில் மாத்திரம் நான்கு கடைகள் வைத்திருப்பதுடன், வெளிநாடுகளுக்கும் தனது படைப்புக்களை ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளார்.

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் இனி சவுதி அரேபியாவில்!


  
உலகின் மிக உயரமான புதிய கட்டிடம், சவுதி அரேபியாவினால் நிர்மாணிக்கப்படவிருக்கிறது. 1.2 பில்லியன்அமெரிக்க டாலர்கள் செலவில் பின் லேடன்ஸ் குரூப் கம்பெனியினால் ஜித்தாவின் ரெட் சீ சிட்டியில் இக்கட்டிடம் கட்டப்படவிருக்கிறது. 2008 இல் இதற்கான திட்டப்பணிகள் முன்னெடுக்க தொடங்கப்பட்ட போதும், தற்போது இக்கட்டிடத்துக்கான முழு வடிவமைப்பும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீற்றர் உயரம், (852 மைல், 1401 மீற்றர்) ஹோட்டல், சேவை நிறுவனங்கள், ஆடம்பர பங்களாக்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்படவுள்ள இக்கட்டிடத்தின் அடியிலிருந்து மேல் உச்சிக்கு லிப்ஃட்டில் செல்லவே 12 நிமிடம் வேண்டுமாம். சவுதி பின்லேடன் குரூப் கட்டிட நிர்மாண பொறுப்பை ஏற்றுள்ளது. தற்போது உலகின் உயரமான கட்டிடங்களாக திகழும் டுபாயின் பூர்ஜ் கலிஃபியா மற்றும் நியூயோர்க்கின் சுதந்திர கோபுரம் என்பவற்றை விட இக்கட்டிடயம் உயரமாக அமைக்கப்படவிருப்பது உறுதியாகியுள்ளது.



Tuesday, August 9, 2011

சிரிப்பு நோய் நிவாரணி

சிரித்து மகிழ்வோடு இருப்பதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது என்பது ஜப்பான் பல்கலைக்கழக சமீபத்திய ஆய்வு. மேலும் இது இரத்த அழுத்தத்தை குறைத்து நரம்பு மண்டலத்திற்கு புத்துயிர் அளித்து தசை பிடிப்புகளை தளர்த்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் இருதயத்தையும் பலப்படுத்துகிறது என்பது நிபுணர்களின் கூற்று.
தென்னை மரத்தில் ஒளியுடன் கண்கள் தோன்றிய அதிசயம் ஒன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் நிகழ்ந்துள்ளது.

உரும்பிராய் மேற்கிலுள்ள ஒருவரின் வீடு அமைந்துள்ள காணியில் இருக்கும் தென்னையிலேயே தற்போது இரண்டு கண்களுடனும் புருவத்துடனும் இவ்வதிசயம் காணப்படுகிறது.

மக்கள் அலையலையாய இதனைச் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.