குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Monday, October 15, 2012

முதல் பிரசவத்திலேயே ஐந்து பிள்ளைகள்


கேகாலை ஹெட்டிமுல்லைப் பகுதியில் வசிக்கும் திலினி ரசாங்கிகா என்ற பெண் இன்று தனது முதல் பிரசவத்தில் ஒரே தடவையில் ஐந்து குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

ஒரு பெண்ணுக்கு தான் தாய்மையடைகிறதை விடப் பெரிய சந்தோஷம் வேறு என்ன இருக்கப் போகிறது. அதிலும் இந்தத் தாய் மூன்று வருடங்கள் தவமிருந்தே இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். செய்தியைக் கேள்விப்பட்ட நமக்கே உள்ளத்தில் ஒரு சின்ன சந்தோஷம் தளிர்விடும் போது அந்தத் தாயின் உள்ளத்தில் பொங்கும் ஆனந்தத்துக்கு அளவே இருக்காது என்பதை அந்தத் தாயின் முகத்தில் பூத்திருக்கும் புன்னகையில் இருந்தே தெரிகிறது.

ஐந்தில் மூன்று ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளுமாகும். பிள்ளை இல்லை என்று மூன்று வருடங்கள் பட்ட வேதனைக்கு பரிசாக கடவுள் ஒரே தடவையில் ஐந்தை அள்ளிக் கொடுத்துவிட்டான் போலும்.

எப்படியோ ஐந்து குழந்தைகளையும் எந்தக்குறையுமின்றி வளர்த்டிதடுக்க அந்தக் கடவுளே அனைத்து வசதிகளையும் அந்தத்தாய்க்கு கொடுக்க வேண்டும்.

இது இவ்வாறிருக்க திருணமாகியும் குழந்தைப் பாக்கியமில்லாமல் எந்தனை சகோதரிகள் நம்மிடத்தில் இருக்கின்றார்கள். இவர்களை நினைக்கும் போது சற்றுக் கவலையாகத்தான் இருக்கிறது. இருப்பினும் ஏதோ ஒரு நன்;மைக்காகவே இவ்வாறு காலம் செல்கிறது என்று தைரியமாக இருக்க வேண்டும்.

திருமணமான முதல் வருட முடிவுக்குள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்கவில்லை என்றால்  அவளுக்கு வந்து சேரும் வாய்ப்பேச்சுக்களுக்கு குறைவே இருக்காது. சில பகுதிகளில் அவர்களை ஒரு அபசகுணமாகவே கருதுவார்கள். நல்ல காரியங்கள் நடத்தும் போது தள்ளி வைப்பார்கள். இந்த மூட நம்பிக்கை நம்மிடத்தில் காணப்படாவிட்டாலும் தமிழ் சினிமாவிலும் நெடுந்தொடர்களிலும் அதிகமாவே காணப்படுகின்றன. இது பாரத மக்களிடம் காணப்படுகிறதா இல்லை இயக்குநர்கள் தம் இஷ்டத்துக்கு சின்னத்திரையில் விளையாடுகிறார்களா என்று தெரியவில்லை. இலங்கையைப் பொறுத்தவரையில் நான் சொல்ல வேண்டியதில்லை. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். உங்களுக்குள்ளும் இவ்வாறானா மூடநம்பிக்கையுள்ள முட்டாள்கள் உள்ளார்களா என்று.

முட்டாள்தனமாக போலிச் சாமியார்களையும், வைத்தியர்களையும் தேடிச் சென்று ஏமாற்றத்தை விலைகொடுத்து வாங்க வேண்டாம். 'குழந்தை இல்லாதவர்கள் உடனே நாடுங்கள்' என்று இன்று பத்திரிகைகளில் அதிகமான விளம்பரங்கள் பிரசுரிக்கப்படுகின்றன. இந்த எல்லா விளம்பரங்களும் எவ்வளவு தூரம் உண்மையானவை என்று சொல்ல முடியாது. ஒரு சிலர் நல்லவர்களாக இருந்தாலும் இன்று அதிகமானவர்கள் பணத்துக்காகவும் காமத்துக்காகவுமே இவ்வாறான விளம்பரங்களைப் பிரசுரிக்கின்றனர்.

பெண்களைப் பொறுத்தவரையில் கடவுள்நம்பிக்கை என்பது அவர்களிடையே அதிகமாகவே இருக்கும். அவர்களை ஏமாற்றக்கூடிய போலிச் சாமியார்களும் நமது சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து செல்லும் பெண்களிடம் தவணை முறையில் சிறிது காலத்துக்கு பணப் புறட்டுவார்கள். மேலும் தனியாகச் செல்லும் பெண்களுக்கு மயக்க மருந்துகளை கொடுத்து அவர்களைத் தப்பான செயல்களுக்கு பயன்படுத்துவார்கள். குழந்தையில்லை என்று மனமுடைந் செல்லும் பெண்கள் இவ்வாறான செயல்களால் இன்னும் உளரீதியாக பாதிக்கப்படுவீர்கள்.

எனவே இது விடயத்தில் பெண்கள் கூடிய அவதானமாக இருந்து கொள்ள வேண்டும்.
குழந்தையில்லை என்று வருத்தப்படுவதை விட்டுவிட்டு நம்பிக்கையுடன் இருங்கள். அந்த காத்திருப்புக்கு ஒரு நல்ல பலன் கிடைக்கும். திலினி ரசாங்கிகாவின் காத்திருப்புக்குக் கிடைத்த பரிசை மறந்துவிடாதீர்கள்.





பஹமுன அஸாம்

1 comment:

  1. அருமையான தகவல் அஸாம்...

    ReplyDelete