குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Saturday, July 13, 2013

நோக்கத்தை மறந்து செயற்படும் துறவிகள்

பஹமுன அஸாம்

யுத்த வெற்றிக்குப்பின்னர் சேதமடைந்த வீதிகள் திருத்தப்படுகின்றதோ இல்லையோ தெருவுக்கொரு புத்தர் சிலை மாத்திரம் நிருவப்பட்டு வருகின்றன. எங்கே நமது வீட்டுக்கு முன்னாலும்  இரவோடு இரவாக புத்தர் சிலை முளைத்திருக்மோ என்ற அச்சத்துடனேயே கண்விழிக்கவேண்டியுள்ளது.

சிறு பான்மை இனம் என்ற ஒன்று இனி இல்லை. இலங்கையில் இனி இரண்டே இனம் தான். அது ஆண் இனம், பெண் இனம் என்று மேடைகளில் கம்பீரமாக அறிக்கைவிடும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ  இலங்கையில் அண்மைக்காலமாக நடைபெறும் இந்த இனவாத அடக்குமுறைகள் பற்றிக் கேள்விப்படுவதில்லை போலும்.

அயலவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், ஏனைய மதத்தவர்களுடன் எவ்வாறு மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும் என்ற பண்பு தெரியாதவர்கள் மதகுருமார்களாக இருப்பது தான் வேடிக்கை(வேதனை)க்குரியதாக உள்ளது.

அண்மைக்காலமாக பல இடங்களில் இரவோடு இரவாக புத்தர் சிலைகள் வைக்கப்பட்ட செய்திகளை அடிக்கடி கேள்விப்பக்கூயதாக விருக்கும். 

கடந்த மே மாதம் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பிள்ளையாரடியில்  புத்தர் சிலை ஒன்று அமைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சி பிரதேச வாசிகளாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிலராலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதே போன்று யாழ்ப்பாணம் குருநகர் மடத்தட்டிப் பகுதியில் கடந்த வெசாக் தினத்தன்று இராணுவத்தினரால் புத்தர் சிலை வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி பிரதேச வாசிகளின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டது.  இவ்வாறு சில சமயங்களில் புத்தர் சிலை வைப்பது தடுத்து நிருத்தப்பட்ட போதும் பல சந்தர்ப்பங்களில் புத்தர் சிலைகள் நிருவப்பட்டதை தடுத்து நிறுத்த முடியாமல் போனது கவலைக்குறியதாகவே உள்ளது.


இவ்வாறான ஒரு சம்பவம் தான் கடந்த 30ஆம் திகதி வாழைச்சேனையில் பதிவாகியது.வாழைச்சேனை ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள பிறந்துரைச்சேனை அல் அஸ்கர் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இரவோடு இரவாக புத்தர் சிலையொன்று முளைத்துள்ளது. 

வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரைக்கு அருகில் உள்ள அல் அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் சாதுலியா வித்தியாலயம் என்பனவற்றுக்குப் பொதுவாக உள்ள விளையாட்டு மைதானத்திலேயே இரவோடு இரவாக புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக பாடசாலைகளின் விளையாட்டு நிகழ்வுகள் இம்மைதானத்திலேயே இடம்பெற்று வருகின்றன. இவ்வாறிருக்க கடந்த 2010 மார்ச் மாதம் 1ஆம் திகதி மைதானத்துக்கு அருகில் உள்ள புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி øமாதனத்தின் சுற்று மதிலை உடைத்து விட்டு இது விகாரையின் காணி என்றும் இதில் வெளியாட்கள் யாரும் இனி விளையாட வரக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தார். 

அதனைத் தொடர்ந்து பாடசாலை நிர்வாகத்தால் இவ்விடயம்  தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது. கடந்த மாதம் 25 ஆம் திகதி மைதானம் பாடசாலைக்குரியது என்று  நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.

இருந்த போதும் வாழைச்சேனை புத்தஜயந்தி விகாரையின் விகாராதிபதி நாவானே அபயவன்ச  அலங்கார தேரர் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொருட்படுத்தாமல் கடந்த முப்பதாம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவோடு இரவாக மைதானத்தில் ஒரு மேசையின் மீது புத்தர் சிலையை வைத்துள்ளார்.
கடந்த யுத்த காலத்தின்போது விகாரையின் காணிகளை முறையாக பராமரிப்பு செய்ய முடியாமல் போனதால் தற்போது பாடசாலை மைதானம் என்று குறிப்பிடப்படுவதாகவும். விகாரைக்கு தற்போது குறைவான காணியே உள்ளதாகவும், இது முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டமல்ல புத்த ஜயந்தி விகாரைக்கான காணியை மீட்கும் போராட்டமாகும் என்றும் புத்தஜயந்தி விகாரையின் விகாராதிபதி நாவானே அபயவன்ச  அலங்கார தேரர் புத்தர் சிலை வைப்பிற்கான காரணத்தைக்  குறிப்பிட்டுள்ளார். 

பௌத்த துறவிகள் என்போர் உலக இன்பங்களைத் துறந்து ஆன்மீக ஈடேற்றத்தை நோக்கமாகக் கொண்டவர்கள் என்று எல்லோரும் அறிந்திருக்கிறோம்.  ஆனால் இன்றைய ஒருசில பௌத்த துறவிகள் உலக இன்பங்களில் மூழ்கி தமது நோக்கத்தை மறந்து செயற்படுகிறார்கள் என்பதை  எண்ணும்போது தான் கவலையாக உள்ளது.

No comments:

Post a Comment