குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Wednesday, September 28, 2011

நாய்க்குட்டியை பிரசவித்த பூனை


இதற்கு முன்னர் ஆடு ஒன்று நாய்குட்டி போட்ட சம்பவம் இடம்பெற்றது. தற்போது பூனை நாய்குட்டி போட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது. சீனாவில் காணப்படும் ஒரு பூனை நாய்க்குட்டியை பிரசவித்துள்ளது.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆம் இந்த தகவல் பற்றிய மேலதிக விபரம் பின்வருமாறு:-
கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் சவ் யுன் என்பவர் பூனை ஒன்றினை வளர்த்து வந்துள்ளார். பின்னர் அந்த பூனை கர்ப்பமடைந்து இரண்டு குட்டிகளை பிரசவித்தது.
இது பற்றி உரிமையாளர் சவ் யுன் கூறுகையில் நான் சென்று பார்க்கும் போது அது தனது இரண்டு குட்டிகளையும் வாயில் கவ்விக்கொண்டு நின்றது. நான் அருகில் சென்று பார்த்ததும் வியந்து போனேன்.
அதில் ஒரு குட்டி நாய்க் குட்டியாக காணப்பட்டது என தெரிவித்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து அங்குள்ள யாங்சன் என்பவர் பத்திரிகையாளர்களை அழைத்து இச்சம்பவத்தினை விபரித்தார்.

No comments:

Post a Comment